×

கார்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி

மாமல்லபுரம்: சென்னை வேளச்சேரியை சேர்ந்த சண்முகம் மகன் ராமகிருஷ்ணன் (39), இவரது தோழி சீனி (40) இவர்கள் இரண்டு பேரும் நேற்று காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை ராமகிருஷ்ணன் ஓட்டி வந்தார். அப்போது மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கூட்ரோடு அருகே  சென்றபோது, எதிர் திசையில் புதுச்சேரியிலிருந்து இருந்து சென்னை நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராமகிஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இவரது தோழி சீனி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

Tags : car crash , One killed in car crash
× RELATED அரவக்குறிச்சி அருகே கார் மோதி டெய்லர் பரிதாப பலி