×

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வார விடுமுறையை ஒட்டி நேற்று அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். மூடப்பட்டிருந்த வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை ஆகியவை கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

இதையடுத்து இந்தப்பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை முதலே வெயில் அதிக அளவில் இருந்ததால் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். தூண் பாறை பகுதியில் மேகமூட்டம் இருந்ததால் அதன் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கொடைக்கானல் வட்டக்கானல் நீர்வீழ்ச்சியில் கொட்டும் மழைநீரை சுற்றுலாப்பயணிகள் ரசித்தனர்.

Tags : Kodaikanal , Tourists congregate in Kodaikanal
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்