×

கரும்பை திருடி மாட்டிக் கொண்டதும் கம்பத்தின் பின் ஒளிந்து கொள்ளும் குட்டியானை: சமூக வலைதளங்களில் வைரல்

சியாங்மாய்: தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் இரவு நேரத்தில் குட்டியானை ஒன்று தனியாக நின்று கரும்பை ருசித்துக்கொண்டுள்ளது. தோட்டத்தில் சத்தம் கேட்டதால் அங்கிருந்த காவலர்கள் டார்ச் லைட்டுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மனிதர்கள் குரல் மற்றும் நடமாட்டத்தை கேட்ட குட்டியானையானது பயந்து அங்கிருந்து ஓட முயன்றுள்ளது.

அப்போது திடீரென தன்னை யாரும் கண்டுபிடிக்காதபடி மனிதர்கள் ஒளிந்து கொள்வது போல அங்கிருந்த மிக மெலிதான மின் கம்பத்தின் பின்னால் சென்று ஒளிந்து கொள்கின்றது.குட்டியானையின் இந்த குறும்புத்தனமான செயலை காவலர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். யானை கம்பின் பின் அசையாமல் நின்று கொண்டிருக்கும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகின்றது.



Tags : After getting caught stealing sugarcane Puppy hiding behind a pole: viral on social media
× RELATED அங்கித் திவாரி மனு தள்ளுபடி