×

வாஜ்பாய் அவர்களின் கனவுகளுக்கு பிரதமர் மோடி உத்வேகம் அளித்துள்ளார்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேச்சு

டெல்லி : வாஜ்பாய் அவர்களின் கனவுகளுக்கு பிரதமர் மோடி உத்வேகம் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். ரோத்தக்கில் உள்ள பண்டிட் பகவத் தயால் சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு அடங்கிய வளாகத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நேற்று திறந்து வைத்தார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை நிகழ்ச்சியின்போது நினைவுகூர்ந்த திரு ஹர்ஷ் வர்தன், வாஜ்பாய் அவர்களின் கனவுகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி உத்வேகம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

Tags : Vajpayee ,Harsh Vardhan ,speech , Vajpayee, Prime Minister Modi, inspiration, Union Minister, Harsh Vardhan
× RELATED 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை...