சென்னை: நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நடிகை அமலா பால் தொடர்ந்த வழக்கில் தொழிலதிபர் பவ்னீந்தர் சிங்கிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. 2019ல் நிச்சயதார்த்தம் ஆன நிலையில் அனுமதியின்றி புகைப்படங்களை வெளியிட்டதாக நடிகை அமலா பால் வழக்கு தொடர்ந்திருந்தார்.