சேலம்: நங்கவள்ளியில் உள்ள சென்றாய பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார். திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கோயிலில் நடக்கும் குடமுழுக்கில் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.