×

வேல் யாத்திரையில் பங்கேற்க சென்றபோது குஷ்பு சென்ற கார் மீது லாரி மோதி விபத்து: மதுராந்தகம் அருகே பரபரப்பு

சென்னை: மதுராந்தகம் அருகே வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற குஷ்பு கார் மீது கன்ெடய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நடிகை குஷ்பு வேல் யாத்திரையில் பங்கேற்க நேற்று காலை சென்னையில் இருந்து கடலூருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன், பாஜ மாநில நிர்வாகி  தர் உள்ளிட்ட சிலர் உடன் இருந்தனர். இவர்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே அய்யனார் கோயில் அருகே காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, முன்னால் சென்னை துறைமுகத்தில் இருந்து ஃப்ரிட்ஜ் ேலாடு ஏற்றி சென்ற கன்ெடய்னர் லாரி, குஷ்பூ சென்று கொண்டிருந்த காரின் பக்கவாட்டில் பலமாக மோதியது. இதில், நடிகை குஷ்புவின் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த யாருக்கும் காயம் இல்லை.

குஷ்பு காயமின்றி உயிர் தப்பினார். பின்னர், வேறு ஒரு கார் மூலமாக அவர்கள் கடலூருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து குஷ்பு கூறுகையில், ‘இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், நாங்கள் கலந்து கொள்வதாக இருந்த யாத்திரை பயணம் தடைப்படாது. அந்த முருக கடவுள் தான் தற்போதைய நிலையில் இருந்து எங்களை காப்பாற்றியதாக நினைக்கின்றோம். எனவே, அவரின் வேல் யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும்‘ என்றார். இது குறித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.



Tags : Khushbu ,pilgrimage ,Madurantakam ,Vail , Khushbu's car collided with a lorry
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு