×

தேர்வு செய்யப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் நாளையே சேர மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவு..!! மாணவர்கள் குழப்பம்

சென்னை: நாளையே மாணவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்குனரக அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஊருக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள மாணவர்கள் தவித்து வருகின்றனர். வழக்கமாக ஒருவாரத்திற்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும். வரும் 20-ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு வருவதன் காரணமாக, அதற்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர உத்தரவு எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. கல்லூரிகளில் சேரும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இன்று கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு மருத்துவ இடத்தை பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நாளையே சேர வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலையில் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வழக்கமாக ஒருவாரத்திற்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும். இதனால் கல்லூரிகளில் சேரும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வரும் 20-ம்தேதி நீதிமன்றத்தில் வழக்கு வருவதன் காரணமாக, அதற்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர உத்தரவு எனத் தகவல் தெரிவிக்கின்றன.

Tags : Directorate of Medical Education ,colleges , Directorate of Medical Education orders students to join selected medical colleges tomorrow .. !! Students are confused
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...