சென்னை: விருத்தாசலம் கிளைச் சிறையில் உயிரிழந்த செல்வமுருகன் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி அவரது மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். செல்வமுருகனின் மனைவி கோரிக்கையை விருத்தாசலம் மாஜிஸ்திரேட் பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் வழக்கில் தங்களை அனுமதிக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.