×

தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது

தர்மபுரி : தர்மபுரியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி மாவட்ட பாஜக சார்பில் வேல் யாத்திரை குறித்த பொதுக்கூட்டம் இன்று, வள்ளலார் மைதானத்தில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் துணை தலைவர்களான வி.பி.துரைசாமி, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்திறகு பின் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற 300-க்கும் மேற்பட்டவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை கைதுசெய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

Tags : Thuraisamy ,BJP ,pilgrimage ,Vail , Vel Yatra, BJP, Vice President, VP Thuraisa
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு