கோவை: கோவை வடவள்ளியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் ரூ.20,000 கள்ளநோட்டை டெபாசிட் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடவள்ளி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மேலாளர் கோகுல்நாத் அளித்த புகாரின் பேரில் காவல்துறை கைது நடவடிக்கை எடுத்துள்ளது. கள்ளநோட்டை டெபாசிட் செய்த நீலகிரியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.