பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இளைஞர்கள் உடல்நலன் மேம்படுத்தும் பொருட்டு உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. சமீபகாலமாக பழவேற்காடு பகுதியில் இளைஞர்கள் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி வரும் சூழலில் நல்வழிப்படுத்தும் நோக்கில் பழவேற்காடு பாபனாரிஷி கோயில் தெருவில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
எஸ்.பி.குப்பம் சி.சீனு,பஞ்செட்டி எஸ்.சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிபராசக்தி ஆன்மிக மன்ற திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர் சக்தி.ஜி. முத்துசாமி திறந்து வைத்தார். மசூல் மான்ஸ்டர், உடற்பயிற்சி கூட அமைப்பாளர் பழவைகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மீஞ்சூர் ஒன்றிய பொறுப்பாளர் பழனி, தன்னார்வலர் வைரவன்குப்பம், ஞானமூர்த்தி, பழவேற்காடு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் ஆனந்த், சுகு, சதாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.