×

நான் பாஜவில் இணைந்துவிட்டேனா?: நடிகர் சந்தானம் பேட்டி

சென்னை: பாஜவில் இணைந்துவிட்டேனா என்பது குறித்து நடிகர் சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்த பிஸ்கோத் என்ற படம் தீபாவளியன்று வெளியானது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று வடபழநியில் உள்ள தியேட்டரில் நடந்தது. அப்போது சந்தானம் அளித்த பேட்டி:
கொரோனா காலத்தில் மக்கள் வெளியே வருவது மன உளைச்சல் நிறைந்தது. இதை தாண்டி தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகத்தில் படத்தை ரிலீஸ் செய்தோம். தற்போது ரசிகர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். ஓடிடி என்பது பூஜை அறை. சினிமா தியேட்டர் என்பது கோயில் மாதிரி.

சினிமாவுக்கு வந்து இத்தனை வருடங்களில் இதுபோல் நான் பயந்தது இல்லை. கொரோனா காலத்தில் பிஸ்கோத் படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோமே.
மக்கள் வருவார்களோ, இல்லையோ என்று பயந்தேன். தற்போது அந்த பயம் போய்விட்டது. நான் பாஜவில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகிறது. இது பிஸ்கோத் படத்தை விட பெரிய காமெடி. எனக்கு எதற்கு அரசியல்? சினிமாவில் இருக்கும் வேலையை ஒழுங்காக செய்தாலே போதும் என்று நினைக்கிறேன்.இவ்வாறு சந்தானம் கூறினார்.



Tags : Santhanam ,Bajaj , Did I join Bajaj ?: Actor Interview with Santhanam
× RELATED இன்றைய நிகழ்ச்சி சம்மர் ஸ்போர்ட்ஸ்...