×

வீரர்களுக்காக தீபம் ஏற்றுங்கள்: மோடி அழைப்பு

புதுடெல்லி: தீபாவளியை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில், ‘இந்த தீபாவளி நன்னாளில் ஏழைகள், ஆதரவற்றவர்கள், உதவிகளை எதிர்ப்பார்பவர்களுடன் உங்களிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் வளமான வாழ்க்கை அமையவும், ஒரு விளக்கை ஏற்றும்போது மற்ற விளக்குகள் ஒளி கொடுப்பது போல உங்கள் வாழ்க்கை இருக்கட்டும். தீபாவளியை தூய்மையாக கொண்டாடுங்கள் இயற்கை மாசுபடாமலும் சுற்றுபுறத்தை நண்பனாகவும் பாவித்து, சுத்தமாக கொண்டாடுங்கள்.

உள்நாட்டில் உள்ள நமது மக்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,’ என கூறியுள்ளார். பிரதமர் மோடி டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘அச்சமின்றி நம் நாட்டைப் பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களுக்காக தீபாவளியன்று தீபமேற்றுவோம். அவர்களின் தைரியத்தினைப் பாராட்டவும், நன்றி சொல்லவும் வார்த்தைகள் இல்லை. எல்லைகளில் போராடிக் கொண்டிருக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டு உள்ளோம்,’ என கூறியுள்ளார்.

Tags : Modi , Light the torch for the players: Modi’s call
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...