சென்னை: தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.