×

ஒடிசாவில் பயங்கரம்... ஒரே குடும்பத்தில் 6 பேர் மர்ம சாவு: பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தனர்

ஒடிசா, :ஒடிசாவின் போலங்கீர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 6 பேர் மர்மமான நிலையில் இறந்து கிடந்தனர். பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்கள் போர்வையால் போர்த்தப்பட்டிருந்தது. ஒடிசா மாநிலம் போலங்கீர் மாவட்டம் பட்நகர் பகுதியில் வசித்து வந்தவர். புலு ஜானி (50). இவரது மனைவி ஜோதி (48). இவர்களுக்கு சரிதா, ஸ்ரேயா என்ற மகள்களும், பீஷ்மா, சஞ்சீவ் என்ற மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இவர்களது வீட்டின் கதவு வெகு நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை தட்டி பார்த்தனர். திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது, ​​புலு ஜானி மற்றும் அவரது மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் என 6 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். உடல்கள் போர்வைகளால் மூடப்பட்டிருந்தன. உடல்களை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் கிராம மக்கள் திரண்டனர்.

உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 6 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர்.சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், புலு ஜானியின் குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளாக, அப்பகுதியில் தேன் சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்’ என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. 6 பேரும் எப்படி இறந்தார்கள், கடன் தொல்லையால் இறந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனவும் அவர்களது மர்ம சாவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags : Odisha ,death ,house , Odisha, horror, mysterious death
× RELATED ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து