புதுடெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 38வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் டெல்லியில் இருந்து அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநில உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தின் சார்பாக திருச்சியில் இருந்து மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர்கள் பட்டாபிராமன் மற்றும் திருவேட்டை செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.