×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் உள்ளிட்ட 9 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் உள்ளிட்ட 9 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியதை அடுத்து 9 போலீசார் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் தரப்படுகிறது. 8 புத்தகங்கள் அடங்கிய சுமார் 4ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. ஆய்வாளர் ஸ்ரீதர், ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் தரப்பட்டது. குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பின்னர் வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் டிசம்பர் 10க்கு ஒத்திவைத்தது.


Tags : policemen ,investigator ,Sathankulam ,court , Sathankulam, father, son, murder
× RELATED தேர்தல் பணிக்கு சென்றபோது 3 போலீசார்...