சத்தி: சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டியில் பழனிசாமி என்ற முதியவரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்துள்ளனர். புஞ்சை புளியம்பட்டியில் வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வங்கியில் இருந்து வெளியே வந்த பழனிசாமியிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு மர்மநபர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.