சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி: திண்டுக்கல் குதிரையாறு அணையில் இருந்தும், தர்மபுரி ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடது கால்வாய்களில் இருந்தும் பாசனத்துக்காக நீர் திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன்படி, ஈச்சம்பாடி அணை வாய்க்கால்கள் வரும் 13ம் தேதி முதல் திறந்து விடப்படும். இதேபோன்று, குதிரையாறு அணையில் இருந்து வரும் 11ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை 120 நாட்களுக்கு பாசனத்துக்காக நீர் திறக்கப்படும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மையை கடைபிடித்து உயர் மகசூல் பெற வேண்டும்.