புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கின் போது இயங்காத சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். சரக்கு வாகனங்களுக்கு 2 மாதமும் பயணிகள் வாகனங்களுக்கு 6 மாதமும் சாலை வரி ரத்து செய்யப்படுகிறது. வரிச்சலுகையால் ஏற்படும் ரூ.21 கோடி இழப்பை கூடுதல் நிதி ஆதாரம் மூலம் சரி செய்யப்படும் எனவும் கூறினார்.