×

தேர்தல் அலுவலரிடம் போதையில் தகராறு எஸ்ஐ சஸ்பெண்ட்

வேலூர்: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லமொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் ஒரு குழுவில் பாதுகாப்பு பணிக்காக பாகாயம் காவல்நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பணியில் இருந்தார்.

தேர்தலுக்கு முந்தைய தினத்தன்று மற்ற அலுவலர்களுடன் வாக்கு இயந்திரங்களை வாகனத்தில் கொண்டு சென்றார். அப்போது தேர்தல் பணியில் இருந்த மற்ற அலுவலர்களிடம் குடிபோதையில் அவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எஸ்.ஐ அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால் அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி மணிவண்ணன் நேற்று உத்தரவிட்டார்.

The post தேர்தல் அலுவலரிடம் போதையில் தகராறு எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : SI ,Vellore ,Tamil Nadu ,Damaktu ,Vellore district ,Bagayam police station ,Dinakaran ,
× RELATED தேர்தல் அலுவலர்களிடம் தகராறில்...