×

வடகுரும்பூரில் குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது வடகுரும்பூர் கிராமம். இந்த கிராமத்தில் ஒருபிரிவினர் வசிக்கும் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் நீண்ட வரிசையில் நின்று தண்ணீர் பிடித்தும் செல்லும் நிலை உள்ளது.,

இதில் பலருக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு வருவதாகவும், இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்திட வேண்டும் என இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : shortage ,North Kurumbur , Public shortage of drinking water in North Kurumbur
× RELATED நியாயவிலை கடைகளில் அரிசி தட்டுப்பாடு...