ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் சுற்றுவட்டாரத்தில் பண மோசடியில் ஈடுபட்ட சாந்தா சுவாமிகள் என்ற சாந்தக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.3 கோடி திருப்பித் தருவதாக கூறி பொதுமக்களிடம் நூதன மோசடி நடந்துள்ளது. பணத்தை இழந்த கேசவமூர்த்தி என்பவர் அளித்த புகாரில் வாலாஜாபேட்டை போலீஸ் சாந்தக்குமாரை கைது செய்தது.