×

கொலைக் குற்றம் செய்தவர்கள் குற்றவாளிகள்தான்... ஏழு தமிழர் விடுதலைக்கு கே.எஸ். அழகிரி எதிர்ப்பு

சென்னை, :தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறை சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்று கொள்வோம். ஆனால் அவர்களுக்கு, அரசியல் கட்சியினர் விடுதலை கோருவது ஏற்புடையதல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல.

அப்துல் கலாம், காமராஜர், அண்ணா, கலைஞர், ஜீவானந்தம், ராமானுஜம் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது. கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கை பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும். எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த  குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது.

Tags : murder ,release ,KS ,Alagiri ,Tamils , Seven Tamils released, K.S. Alagiri, resistance
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...