சென்னை: போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. 17 வயது சிறுமியை காதலித்து கர்பமாக்கிய வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த அருண்குமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சிறுமியை 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததை அடுத்து ஜாமின் வழங்கப்பட்டது.