×

நீலகிரி மாவட்டத்தில் அரசின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது: முதல்வர் பழனிசாமி

நீலகிரி: நீலகிரியில் ரூ.447 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நீலகிரி மாவட்டத்தில் அரசின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. நீலகிரி மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக இனி கோவை செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 39 பேர் இறந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags : Corona ,Nilgiris , Nilgiris, corona affected, under control, Chief Palanisamy
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...