சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டால் முழுக்க முழுக்க இந்தியில் பதிலளிப்பதா என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.டி.ஐ.யில் தி.க. வழக்கறிஞர் குமரேசன் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்தியில் பதிலளித்ததற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சகம் இந்தியில் பதிலளித்துள்ளது பாஜகவின் இந்தி ஆதிக்கத்தை காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.