×

பாம்பை கொன்று எஜமானரை காப்பாற்றி உயிரை விட்ட நாய்

தஞ்சை, :தனது எஜமானரை காப்பாற்றுவதற்காக பாம்புடன் சண்டையிட்டு கொன்றதுடன் தனது உயிரையும் நாய் பறிகொடுத்தது. இந்த நாயை பிரிந்த சக நாய் உணவு சாப்பிடாமல் சேகாத்தில் உள்ளது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.தஞ்சை இபி காலனி சிந்து நகரை சேர்ந்தவர் எழில்மாறன் (55). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மாலா. இருவரும் வீட்டில் ரியோ, ஸ்வீட்டி என்ற 2 நாய்களை வளர்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாலை எழில்மாறன் வீட்டுக்குள் கட்டுவிரியன் பாம்பு புகுந்தது.


 இதை பார்த்த நாய் ரியோ வீட்டுக்குள் பாம்பை விடாமல் பாம்புடன் சண்டையிட்டது. இதில் கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் ரியோ உடலில் விஷம் ஏறியது. இதை பொருட்படுத்தாமல் பாம்புடன் சண்டையிட்டு கடித்து குதறி 2 துண்டுகளாக்கியது. ஆனால் விஷம் ஏறிய ரியோ வாயில் நுரை தள்ளி இறந்தது.

 மறுநாள் காலை எழுந்து எழில்மாறன் தம்பதி பார்த்தபோது நாய் மற்றும் அருகில் பாம்பு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தங்களை காப்பாற்றி தனது உயிரை பறிகொடுத்த நாய் ரியோவை தங்கள் வீட்டின் பகுதியிலேயே அடக்கம் செய்தனர். ரியோ திடீரென இறந்ததால் அதன் பிரிவை தாங்க முடியாமல் ஸ்வீட்டி என்றழைக்கப்படும் நாய், உணவு சாப்பிடாமல் சோகத்துடன் இருந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : master , Snake, dog
× RELATED கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை!