மேட்சல்: தெலுங்கானா மாநிலம் மேட்சல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் இன்று தீப்பிடித்தது. இது குறித்து தென் மத்திய ரயில்வேயின் சிபிஆர்ஓ சி.ரகேஷ் கூறுகையில், ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 பெட்டிகளில் 2 தீப்பிடித்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்து எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.