சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராகவும், திருவள்ளூர் ஆட்சியர் மகேஷ்வரி காஞ்சிபும் ஆட்சியராகவும், தருமபுரி ஆட்சியர் மலர்விழி கரூர் ஆட்சியராகவும், மாநில நிதித்துறை இணை செயலாளர் அரவிந்த் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.