×

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாமக உள்ளது. கூட்டணியில் எந்த பிளவும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

சென்னை : தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்றியது அதிமுக அரசு தான் என்று ராமதாஸுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக உள்ளது. கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்று வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை ராமதாஸ் அறிவித்துள்ளது பற்றிய கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆந்திரத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதை செய்கிறார். ஆனால், இங்குள்ளவர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை என கடுமையாக சாடியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசை திடீரென்று விமர்சனம் செய்துள்ள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவு குறித்து கேள்வி கேட்ட போது, தமிழகத்தில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்றியது அதிமுக அரசு தான்.தேர்தல் நேரத்தில் தங்களை முன்னிறுத்திக் கொள்ள இப்படி செய்வார்கள்.அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாமக உள்ளது. கூட்டணியில் எந்த பிளவும் இல்லை, என்றார்.

Tags : AIADMK ,Jayakumar , AIADMK, Coalition, BJP, Minister Jayakumar, confirmed
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...