புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஐடிசி நிறுவனத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஐடிசி தொழிற்சாலை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடியாக 2,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொடர்ந்து, ஐடிசி தொழிற்சாலையை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டு வருகிறார்.