×

செல்போனில் பேசியபோது 5வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதூர்: தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை வல்லூண்டாண்பட்டு, ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்தவர் ராவணன். இவரது மகன் பிறைமுகிலன் (22). ஸ்ரீபெரும்புதூர் அருகே மாத்தூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, மாம்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பிறைமுகிலன், வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார். பின்னர், அடுக்குமாடி குடியிருப்பின் 5 மாடிக்கு சென்று, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர், நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்து ஒரகடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : floor , Walipar falls from 5th floor while talking on cell phone and dies
× RELATED பால்கனியில் சாப்பாடு...