×

குன்னூரில் குடியிருப்புக்குள் புகுந்து நாயை தூக்கி சென்ற சிறுத்தை

குன்னூர்: குன்னூரில் குடியிருப்பு பகுதிக்குள் இரவில் புகுந்து நாயை தூக்கி சென்ற சிறுத்தையால் பொதுமக்கள் பீதியமடைந்தனர். சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ் கம்பெனி அருகில் நல்லப்பன் தெரு உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறுத்தை நடமாடியது. தொடர்ந்து வீட்டின் முன் இருந்த நாயை வேட்டையாடி தூக்கிச் சென்றது.

அந்த காட்சி குடியிருப்பு ஒன்றில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து சம்பவயிடம் வந்த வனத்துறையினர் தீப்பந்தம் ஏந்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர். பிறகு வனத்திற்குள் பொருத்திய கேமராக்கள் மூலம் சிறுத்தை எங்குள்ளது? என ஆய்வு செய்தனர். சிறுத்தையை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் சிறுத்தை வந்து நாயை தூக்கி சென்ற சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags : residence ,Coonoor , Leopard, Coonoor
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...