×

வாங்க ஆளில்லாததால் விரக்தி: வயல்களிலேயே வைக்கோலை தீ வைத்து எரிக்கும் விவசாயிகள்

வேதாரண்யம்: வாங்க ஆளில்லாததால் விரக்தியில் விவசாயிகள் வயல்களிலேயே வைக்கோலை தீ வைத்து எரிப்பதால் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பிராந்தியங்கரை, அண்டகத்துறை, செம்பியமணக்குடி ஆகிய பகுதிகளில் 5000 ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. அறுவடை முடிந்த நிலையில், அறுவடை செய்யப்பட்ட அந்த வைக்கோலை வாங்க ஆட்கள் வரவில்லை. உரிய விலையும் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் அடுத்த கட்ட இரண்டாம் போக சம்பா சாகுபடி பணிகளை உடனடியாக துவங்க வேண்டிய நிலை உள்ளதால் விரக்தியில் விவசாயிகள் வயல்களிலேயே வைக்கோலை தீ வைத்து எரித்து, வயல்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : no one , Fire, farmers
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...