×

கொரோனா காலத்தில் சீர்மிகு பணியாற்றி உயிர்நீத்த தியாக சீலர்களான அனைத்து போலீசாருக்கும் திமுக சார்பில் வீரவணக்கம் : மு.க.ஸ்டாலின் புகழாரம்!!

சென்னை : உள்நாட்டு பாதுகாப்பு, பொது அமைதியை நிலைநாட்டும் போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று வீர வணக்கநாளை யொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. உயிர்நீத்த போலீசாருக்கு அந்தந்த பகுதி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (21-10-2020) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

காவல்துறையில் பணியாற்றித் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து - வீரமரணமடைந்த போலீசாருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இன்று (21.10.2020) நாடு முழுவதும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. மற்றும் மாநிலத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பில் - பொது அமைதியை நிலைநாட்டுவதில் உயிர் நீத்த போலீசாருக்கு -  குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் சீர்மிகு பணியாற்றி -  உயிர் நீத்த தியாக சீலர்களான போலீசார் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன்,

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : policemen ,Weerawansa ,DMK ,MK Stalin ,Corona , Corona, DMK, Weerawansa, MK Stalin, Praise
× RELATED தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ்