சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியின்றி துணி வாங்க திரண்டனர். கொரோனா பரவும் நேரத்தில் சமூக இடைவெளி மீறப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதையடுத்து மாநகராட்சி அதிகார்கள் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.