சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனவும், அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து அளித்தால் பல்கலை. கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.