×

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்கள் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று ஒரேநாளில் 1, 2, 3, 5 ஆகிய 4 யூனிட்டுகள் இயங்கவில்லை. 4வது யூனிட்டில் 210 மெகா வாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகமும், அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் தொடர்ந்து சீராக உள்ளது. எனவே, இவற்றின் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் மின் மின்தேவை குறைவு மற்றும் மிகை மின் உற்பத்தி காரணமாக 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அனல் மின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : units ,Thoothukudi Thermal Power Station , 4 units shut down at Thoothukudi Thermal Power Station
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த்...