கன்னியாகுமரி: தொடர் மழை காரணமாக தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை, 74 அடியை எட்டியது. இதனையடுத்து, பெருஞ்சாணி அணையிலிருந்து 1,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.