திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் 10 பேருக்கு என்ஐஏ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சையத் ஆலவி, அப்துல், ஹம்ஜத் அலி, அப்துல் ஹமீது, ஜிபிசல் உள்ளிட்ட 10 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முகமது அலிம், முகமது ஷாஃபி, ஷரபுதீன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை என்.ஐ.ஏ தள்ளுபடி செய்தது.