திருவனந்தபுரம்: கேரளாவில் புகழ்ப்பெற்ற மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி (94) உடல் நலக்குறைவால் காலமானார். அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி மதுவிது, பாகவதம், பஞ்சவர்ணக் கிளி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். மேலும், பலிதர்சனம் என்ற நூலுக்காக அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி 1973ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.