சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்தார். விவிபேட், ஈ.வி.எம் இயந்திரம் தயார் நிலையில் உள்ளது எனவும் கூறினார். மேலும் கொரோனா பாதிப்பு இருக்கும்பட்சத்தில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டுபோட அனுமதி அளிக்கப்படும் என கூறினார்.