×

2-வது நாளாக தங்கம் விலை சரிவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.376 குறைந்து ரூ.38,704-க்கு விற்பனை...இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.!!!

சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்றும் குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டது.  மாதத்தின் முதல் (1ம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு 6  அதிகரித்து ஒரு கிராம் 4,815க்கும், சவரனுக்கு 48 அதிகரித்து ஒரு சவரன் 38,520க்கும் விற்க்கப்பட்டது. தொடர்ந்து, அடுத்த நாள் 2-ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு 54 அதிகரித்து  ஒரு கிராம் 4,869க்கும், சவரனுக்கு 432 அதிகரித்து ஒரு சவரன் 38,952க்கும் விற்கப்பட்டது. இருப்பினும், 3-ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,800-க்கு விற்பனையானது.

தொடர்ந்து, 5ம் தேதி ஒரு சவரன், 38,568-க்கும், 6-ம் தேதி 38,880, 7ம் தேதி 38,448, 8ம் தேதி 38,480-க்கும், 9-ம் தேதி 38,800-க்கும் விற்கப்பட்டது. 10-ம் தேதி கிராமுக்கு 31 அதிகரித்து ஒரு கிராம் 4,881க்கும், சவரனுக்கு 248 அதிகரித்து ஒரு சவரன்  39,048க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 11-ம் தேதி ஞாயிற்று கிழமை விலை மாற்றமின்றி இருந்த நிலையில், 12-ம் தேதி நேற்று முன்தினம், சவரன் ரூ. 48 உயர்ந்து ரூ. 39,096க்கு  விற்பனையானது. அதே நேரத்தில் மீண்டும் சவரன் 39 ஆயிரத்தை தாண்டியது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், நேற்று முதல் 2 நாளாக தங்கம் விலை சரிந்து வருகிறது. நேற்று 13-ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 காசு குறைந்து ஒரு கிராம் ரூ.4,836-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 2 நாளாக குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


Tags : Housewives ,Chennai , Gold prices fall for 2nd day: Gold razors fall by Rs 376 to Rs 38,704 in Chennai ... Housewives happy !!!
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...