×

விபத்தில் மூளைச்சாவு 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த திருவாரூர் வாலிபர்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ராஜேந்திரன்- தமிழரசியின் மகன் குபேரன் (19). கடந்த மாதம் 30ம் தேதி  தாத்தாவுடன் மளிகை பொருட்கள் வாங்க பைக்கில் சென்றபோது எதிரே வந்த பைக் மோதி இவர் படுகாயமடைந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து, மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றொர் சம்மதித்தனர். இதையடுத்து, குபேந்திரனின் இதயம், இரண்டு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் எடுக்கப்பட்டது. இதன்மூலம் 5 நோயாளிகள் மறுவாழ்வு அடைந்துள்ளனர்.


Tags : Thiruvarur ,accident , Thiruvarur youth who rehabilitated 5 people with brain death in the accident
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்