சென்னை: முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.பரிசோதனையில் கொரோனா உறுதியானது. உடனடியாக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 7ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தில் கோகுல இந்திரா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.