மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை சாலையில் பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்ட ஆட்டோ ஓட்டுனர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.