கடலூர்: கடலூரில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கல்லூரியில் கொரோனா சித்தா சிகிச்சை மையம் அமைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 பேர் சித்தா மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரமான உணவு வழங்க கோரி கொரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.