×

பயணிகள் கூட்டம் அதிகரிப்பு மெட்ரோவில் 4.20 லட்சம் பேர் பயணம்

சென்னை: மெட்ரோ ரயிலில்கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4.20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வை அடுத்து கடந்த மாதம் 7ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. ஆரம்பத்தில் கூட்டம் இல்லை. தற்போது அனைத்து தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த மாதம் 7ம் தேதி முதல் நேற்று வரை 4.20 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவழி, இருவழி, பலவழி பயண அட்டைகளில் வழங்கிய சலுகை காரணமாகவும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


Tags : passengers ,Metro , 4.20 lakh passengers on Metro
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!